கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு பெரும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குலசேகரம் அடுத்த திருநந்திக்கரை பகுதியில் இருநூறு ஆண்டுகள் பழைமையான அரசமர கிளை காற்றில் முறிந்து விழுந்தது.
இதில் அப்பகுதியில் இரண்டு வீடுகள், ஆறு கடைகள், மூன்று மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. அதிஷ்ட வசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. அரசமர கிளையை குலசேகரம் தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.