இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான கோரிக்கை நடந்தது.
2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யவும், கொரோனா தொற்றின் தாக்கம் தணிந்தவுடன் மாணவர்களின் நலன் கருதி சுழற்சி முறையில் பள்ளிகளை திறந்திடுவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கோரிக்கை நடந்தது.